Friday, February 4, 2011

வங்காளதேசத்தில் பிரம்படிக்கொடுத்து 14 வயது சிறுமி கொலை


வங்காள தேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமி சொசாமெட் ஹெனா.இவள் டாக்கா நகருக்கு வெளியே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தாள்.அவள் அந்த கிராமத்தை சேர்ந்த திருமணமான 40 வயது ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்த தாக கூறப்படுகிறது. இதை அறிந்த கிராமவாசிகள் மத தலைவர்களிடம் புகார் கூறினார்கள். மத தலைவர்களின் பஞ்சாயத்து கூடி இது பற்றி விசாரணை நடத்தியது.

முடிவில் அந்த சிறுமிக்கு சாகும் வரை 100 முறை சவுக்கடி கொடுக்க வேண்டும் என்றும், கள்ள உறவு வைத்து இருந்த 40 வயது ஆணுக்கு 100 பிரம்படி கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.



இதை தொடர்ந்து அந்த கிராமத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அந்த பெண்ணுக்கு பிரம்படி கொடுக்கப்பட்டது. 70முறை பிரம்படி கொடுக்கப்பட்ட போதே அந்த பெண் மயங்கி விழுந்து விட்டாள். அதன் பிறகு அவள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள்.அங்கு அவள் இறந்து விட்ட்தாக டாக்டர்கள் அறிவித்தனர்.
அவளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட ஆண் தண்டனை கொடுக்கும் முன்பே ஒடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து டாக்கா ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரனை நடத்தியது.அந்த சிறுமியை பாதுக்காக்க தவறியது ஏன் என்பதற்கான விளக்கத்தை 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது



                --- நன்றி தினத்தந்தி



இது தான் இஸ்லாமியர்களின் கோர்ட்டின் தீர்ப்பு.மனிதனை மனிதனாகவே கருதாத ஒரு காட்டுமிராண்டித்தனமான இந்த தீர்ப்புகள் தான் இவர்களின் அடிப்படை பாரம்பரியம்.ஒரு முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் வெறியை இன்னும் கோட்பாடுகளாகவும்,கொள்கையாகவும் வைத்து இருக்கிற மதம் தான் இஸ்லாம்.இதை செய்ய தான் ஜமாத்துக்கள் படுவேகமாக செயல்பட்டு வருகின்றன. இந்த பெண்னையே எடுத்துக்கொள்வோம்.14 வயது பெண்ணுக்கு செக்ஸைப்பற்றி என்ன தெரிந்திருக்கும் இருக்கும்.அந்த பெண் தானாகவே முன்வந்து தன்னைவிட வயதில் அதிகமாக இருக்கும் ஆண்களிடம் உறவுக்கொண்டு இருப்பாலா?அறிவியல் ஒரு பெண் உடல் உறவுக்கொள்ள உடல்ரிதியான தகுதி குறைந்தது  16 என்றும் என்றாலும் உடல் வளர்ச்சி,சிந்தனை வளர்ச்சி போன்றவைகளும் சேர்ந்துதான் இதை சொல்லமுடியும் என்று கூறுகிறது. ஜனநாயக நாடுகளில் 14 என்பது குழந்தைகளுடன் உறவு எனபது பாலியல் பலாத்காரம் என்றுதான் சட்டம் சொல்கிறது.ஆனால் இந்த காட்டுமிராண்டிகளின் கோட்பாட்டில் இது சரி,இது தான் நீதி  போல. 40 வயது ஆண்னும் 14வயது பெண்ணையும் சம்மாக பாவிக்கும் இந்த செயல்களை நீதி என்று ஏற்ப்பது சரியாகுமா? சிந்திப்பீர்.

No comments: