Monday, July 28, 2008

உலக தத்துவ ஞானி சாக்ரடீஸ்

மதவாதிகளை நோக்கி "கடவுள் என்பவர் யார்?" எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர், சாக்ரடீஸ் தான்.

உலகம், அறியாமை இருளில் மூழ்கித் தவித்தது. இடி,மின்னல்,வெள்ளம்,பூகம்பம் ஆகியன போன்ற இயற்கையின் திருவிளையாடல்களைக் கண்டு மக்கள் மிரண்டனர்.வாழ்வில்,மரணபயம் அழுத்தியது.

மக்கள் மனதில் வளர்ந்த அச்சம் காரணமாகக் கண்டவற்றையெல்லாம் கடவுளாகக் கருதி வணங்கத் தொடங்கினான். கடவுளிடத்தில் ஆத்மார்த்த பக்தி கொள்வதற்கு பதிலாக அச்சமே கொண்டிருந்தான்.

மக்களின் மனம் வளர்ச்சி பெறாத அந்தக் காலத்திலேயே இயற்கயின் நிகழ்வுகள் ஏற்பட என்ன காரணம் எனக் கேள்விக்கணைகள் தொடுத்தவர் சாக்ரடீஸ். அவர், வெறும் நம்பிக்கையே ஆதாரமாகக்கொண்டு வாழ்ந்த மனிதனைச் சிந்திக்கவும் தூண்டினார்.(அது தான் மிகப்பெரிய தவறான செயலாச்சே)அதனால் அவர் கடவுள் நம்பிக்கையற்றவர்,கடவுள் வெறுப்பாளர்,மக்களின் மனதை மயக்கும் மாயப்பிசாசு என்றும், சிந்தனை என்னும் பொருளற்ற சொல்லைப்பயன்படுத்தி,எதுவும் அறியாத இளைஞர்களின் மனத்தை பாழ்படித்துகிறார்.இந்நாட்டின் முதல் பகைவர் என,ஏதென்ஸ் நகரப் பிற்போக்குவாதிகளால் குற்றஞ்சாட்டப்பட்டார். அதுமட்டுமல்ல,அவரைக் குற்றவாளி என நீதி மன்றத்தில் நிறுத்தினர்.முடிவில் அவருக்கு மரணதண்டனை என்னும் பெயரில் நஞ்சுக்கோப்பை அளிக்கப்பட்டது சாக்ரடீஸ் அமைதியாகப் பகைவர்கள் நஞ்சினை மக்களின் சிந்தனை வளர்ச்சிகாக அமுதமாக நினைத்து அருந்தினார்.

சாக்ரடீஸின் சித்தாந்தம்:

சிந்திப்பதும்,சிந்தனையில் தோன்றுவதைச் சொல்லுவதும் தனி மனிதனின் பிறப்புரிமையாகும். அதனைத் தடுக்கவோ தட்டிக்கேட்கவோ எவருக்கும் உரிமை இல்லை.
நடமுறையில் குடியாட்சிமுறை இருந்தாலும்,சமுதாயத்தின் உயர்மட்டத்தில் வாழ்பவர்,மக்களை அடிமைகளாக நடத்துகிறார்கள். ஓழுக்கமே இல்லாதவர் ஒழுக்கத்தைப்பற்றிப் போதிக்கிறார்கள். உண்மையான மக்களாட்சி மலர வேண்டுமானால் மனிதன் சிந்திக்க வேண்டும்.இவ்வாறு கூறினார் சாக்ரடீஸ்.
இன்னல்களுக்கும், ஆசைகளுக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் மனிதன் எவ்வாறு வாழவேண்டும் எனவும் அவர் போதிக்கிறார்.

மனத்தூய்மையின் அவசியத்தை எடுத்துக்கூறி,ஒழுக்கசீலர்களாக மக்கள் வாழ முயலவேண்டும் எனவும் சாக்ரடீஸ் சுட்டிக்காட்டினார்.

கொள்கையில் உறுதி உடையவராக விளங்க வேண்டும், என்றும் கொள்கைப்பிடிப்பில்லாதவர் குள்ளநரியை விட கொடியவராவர்.இலட்சிய வெறியோ இல்லாதவர், வாழ்க்கையில் சிறப்பினை அடைய முடியாது. அவரால் அவருக்கும் சமுதாயத்திற்கும் எவ்வித நலனும் இல்லை என்பதனை வலியுறுத்திக்கூறினார்.

தன்னடக்கம்,சிந்தனைத் தெளிவு,நல்லொழுக்கம்,கருணை,பணிவு,கட்டுப்பாடு,புலனடக்கம்,நேர்மை ஆடிய பண்புகளே உண்மையான ஞானமாகும். இவையே வாழ்வின் வெற்றிக்குரிய திறவுக்கோல் எனப் போதித்தார்.

பிறப்பு:

நாகரிகமற்ற நாடுகளுக்கு மத்தியில், புராதன காலத்திலேயே,ஒரளவிற்கு நாகரிகத்துடன் விளங்கியது ஏதென்ஸ் நகரம். அதற்குக் காரணம், அண்டை நாடுகளிலிருந்த வணிகர்களும் செல்வந்தர்களும் ஏதென்ஸில் வந்து தங்கியமையேயாகும்.

கிறிஸ்து பிறப்பதற்க்கு ஏறத்தாழ 500ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது,கிமு.469 ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில்,ஏழைக் குடுப்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் ஒரு சிற்பி. இவர் தாயார் ஒரு மருத்துவச்சி."காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்னும் முதுமொழிக்கு ஏற்ப அப்பெற்றோர்கள் அவலட்சணமாகப் பிறந்த தங்கள் குழந்தையை சீராட்டி பாராட்டி வளர்த்தனர்.

சாக்ரடீஸ் தன் குடும்பத்தைப்பற்றி கவலைபடாமல் ஏதென்ஸ் நகரின் இயற்கை அழகில் சுற்றித்திறிந்தார்.அக்காலத்தில், இந்நாள் போல் முறையான கல்விப்பயிற்சிக்கு வழியில்லை என்றாலும்,சாக்ரடீஸ் சுயமாக தன் அறிவினை வளர்த்துக்கொண்டார்.

வாலிபப் பருவம் எய்திய சாக்ரடீஸிக்கு தம் குடும்பத்தின் வறுமைநிலை புரியத் தொடங்கியது.எனவே அவர் தம் சிந்தனைக்கு சற்று ஒய்வு கொடுத்தார் தம் தந்தைக்கு சிலகாலம் உதவியாக இருந்தார்.

ஏதென்ஸ் நகரத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் விட்டுக்கொரு பிள்ளையைக் கட்டாயமாக இராணுவத்திற்கு அனுப்பவேண்டும் என்பது சட்டம். எனவே சாக்ரடீஸ் பெற்றோர்கள், அவரை இராணுவத்தில் சேர்த்தனர்.
சாக்ரடீஸ் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இராணுவத்தில் பணிப்புரிந்தார்,பின்பு ஒய்வு பெற்றதும் வீடு திரும்பினார். பின்பு அவர் குறிப்பிடும்படியாக ஒரு வேலையும் செய்யவில்லை.

கலையில் எழுந்து வெளியில் சுற்ற கிளம்பிவிடுவார்.எதிர்ப்படுகிறவர்களிடம் எல்லாம் ஏதாவது ஒரு வினா தொடுப்பார்.அவர்கள் அதற்குப் பதில் தெரியாமல் விழிப்பார்கள்.அவர்களிடம் அடுத்தடுத்த வினா எழுப்பு விடையை வரவழைத்து, அவர்கள் அறிவு விளக்கம் பெற செய்வார்.

மக்கள் கூடும் இடங்களில் நின்றுகொண்டு சாக்ரடீஸ் உரக்கப் பேசுவார். அவர் பேச்சைக்கேட்டு இளைஞர்கள் தேனுண்ட வண்டுக்களைப்போல மயங்கி நிற்பார்கள். இவ்வாறு சாக்ரடீஸ் ஏதென்ஸ் நகர இளைஞர்களுக்கு அறிவு புகட்டும் பணியைச் செய்து வந்தார்.
சாக்ரடீஸின் அறிவு வன்னையை உண்ர்ந்த செல்வந்தர்கள், தங்கள் பிள்ளைகளை அவரிடம் கல்வி கற்க அனுப்பினர்.அவர்களுள் ஒருவர் தான் தத்துவ மேதை பிளாட்டோ.

சாக்ரடீஸ் தம் அறிவாற்றலால் ஏதென்ஸ் நகர மக்களின் கவனத்தைக் கவர்ந்தார். அவரது ஆழ்ந்த சிந்தனையும் சிறந்த நாவன்னையும் அவருக்கு மக்களிடயே நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன.

சாக்ரடீஸ் தம் மனைவி, மக்களை மறந்தார். குளிர்.வெயில்,மழை ஆகியவற்றைத் துச்சமெனக் கருதினார்.துறவி போல் வாழ்ந்தார். ஏதென்ஸ் நகர எல்லைகுள்ளே சுற்றித் திரிந்தார்.பேசிக்கொண்டே இருந்தார். அவர் பணத்திற்காகவோ,புகழுக்காகவோ பேசவில்லை.உலகம் என்றென்றும் மறக்க முடியாத உயர்ந்த உண்மைகளைப்பற்றி பேசினார்.

ஒரு நாள் சாக்ரடீஸுக்கும் நண்பருக்கும் இடையே அழகு பற்றி விவாதம் எழுந்தது. அழகு என்றால் என்ன? எனக் சாக்ரடீஸ் தம் நண்வரைக் கேட்டார்.அதற்கு அவர்"அது ஒரு பெண்ணிடம் அமைந்திருப்பது"என்றார். உடனே சாக்ரடீஸ் "குதிரைகூட அழகாகத்தான் இருக்கிறது. ஏன் பானைக்கூட அழகாகத்தான் இருக்கிறது என்றார்.அது கேட்டு நண்பர் குழப்ப முற்றார். அப்பொழுது சாக்ரடீஸ், நண்பா! ஓர் அழகான பானை இருக்கிறது. அதனுள் சுவையான உணவுப் பண்டம் இருக்கிறது. அந்த உணவை எடுக்க எது வேண்டும்? தங்கக் கரண்டியா,மர அகப்பையா? எது பிறருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறதோ,அதுதான் அழகு என்று விளக்கினார்.

இதுபோன்று எளிய கேள்வி - பதில் முறையில் அவரது சித்தாந்தம் விளக்கப்பட்டிருக்கும்.
வாழும்வரை நியாயமாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் வாழவேண்டும்.பிறருக்கு நன்மை செய்யாதவன் கடவுளை வழிபடுவதால் அவனுக்கு நன்மை ஏற்பட வாய்பே இல்லை என்று அவர் அறிவுறுத்தினார்.

திருமணம்:

சாக்ரடீஸ் இருமுறை திருமணம் செய்துக்கொண்டவர். முதலில் மெர்ட்டன் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.அவளுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தன.அவள் அடக்கமானவள்,சாக்ரடீஸ் மீது அன்பும்,மதிப்பும் வைத்திருந்தாள்.பின்பு அவள் மறைவுக்கு பிறகு தன் இரு குழந்தைக்காக சாந்திபீ என்னும் பெண்ணைத் திருமணம் செய்துக்கொண்டார்.ஆனால் அவள் கணவனின் நடைவடிக்கை பிடிக்காமல் திட்டி திர்த்துக்கொண்டு இருந்தாள்.தமது கணவன் பேச்சு எல்லாம் வீண்பேச்சு என்று சொல்லி திட்டுவாள்.

ஒரு முறை சாக்ரடீஸ் பகுத்தறிவுக் கொள்கையைப்பற்றி நண்பர் ஒருவரிடம் தம் விட்டின் முன் நின்று விவாதம் செய்துக்கொண்டிருந்தார்.ஆதலால் தன்னை சுற்றியிருப்பவர்களை மறந்தார்.அவர் மனைவி நீண்ட நேர அழைத்தும் சாக்ரடீஸ் காதுகளில் விழவில்லை. இதனால் கோபம் அடைந்த அவர் மனைவி கண்டபடி கடிந்து பேசினாள்.அப்பொழுதும் சாக்ரடீஸ் பேச்சை நிருத்தவில்லை.இதனால் சினம் கொண்டு பாத்திரத்தில் தண்ணிர கொண்டுவந்து சாக்ரடீஸின் தலையில் கொட்டினாள். எதிபாராத இச்செயலைக்கண்ட சாக்ரடீஸுக்கு தர்மசங்கடமாகிவிட்டது.ஆனால் சாக்ரடீஸ் தம் நண்பரிடம் அதிர்ச்சி கொள்ளாமல்,நாண்பா இவ்வளவு நேரம் வானம் மின்னியது,இடி இடித்தது,இப்பொழுது மழை பெய்தியிருக்கிறது அவ்வளவுதான் என அமைதியாக பதில் கூறினார்.பின்பு இதுபோல் பல சம்பவங்களால் சாந்திபீ மனதில் மாற்றம் ஏற்பட்டது.

மக்களைத் திருத்தியது மாபெரும் குற்றம்:

சாக்ரடீ்ஸின் செய்கை அரசாங்க அதிகாரிகளை ஆத்திரமடையச் செய்தது. இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கினால் தங்களால் அமைதியாக ஆட்சி நடத்த முடியாது என அவர்கள் கருதினர்.எனவே தம்போக்கை மாற்றிக்கொள்ளும்மாறு அவர்கள் சாக்ரடீஸை எச்சரிக்கை செய்தனர் ஆனால் சாக்ரடீஸ் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு அடிப்பணியவில்லை.அதனால் அதிகாரிகளின் கோபம் எல்லை மீறியது.அவர்மீது அவர்கள் குற்றம் சுமர்தினர்.

சாக்ரடீஸ் ஏதென்ஸ் நகரக் கடவுள்களை நம்ப மறுக்கிறார். மக்கள் மனதிலும் கடவுள்மீதுள்ள நம்பிக்கையை இழக்குமாறு செய்கிறார்.பலவாறு பேசி ஏதென்ஸ் நகர இளைஞர்களின் மனதைக் கெடுக்கிறார்.

இவ்விரு குற்றங்களைச்சுமர்த்தி அரசாங்க அதிகாரிகள் சாக்ரடீஸைக் கைது செய்தனர். விசாரணைக்காக மக்கள் மன்றத்தில் கொண்டுவந்து நிறுத்தினர்.
அப்பொழுது ஏதென்ஸில் குடியரசு என்னும் பெயரில் அநாகரிக ஆட்சிபுரிந்தவர்களின் நீதி மன்றத்தில், நீதியை எதிப்பார்பது தவறு என்பதை சாக்ரடீஸ் நன்கு அறிவார்(இந்தியாவை போன்று).எனவே பொறுமை காட்டினார்.

விசாரணைக்குப் பிறகு வாக்கெடுப்பு நடந்தது. சாக்ரடீஸ் குற்றவாளியென 281 பேரும், அவர் குற்றமற்றவர் என 220 பேரும் வாக்களித்தனர்.61 வாக்கு வித்தியாசத்தில் சாக்ரடீஸ் குற்றவாளி என முடிவாயிற்று.

இறுதியாக, ஆட்சியாளர்கள்,சாக்ரடீஸ் இனிமேல் தம் பேச்சின் மூலம் மக்களைத் தூண்டாது இருப்பதாக ஒப்புக்கொண்டால் தண்டனையை மாற்றி அமைப்பதாக கூறினார்.ஆனால் சாக்ரடீஸ் ஏதென்ஸ் நகர மக்களுக்காகப்பேசிக்கொண்டேயிருப்பேன்.உண்மையைத்தேடி அலையும் என் மக்களுக்குச் சிந்திக்கச் சொல்லிக் கொடுப்பதற்காகவே நான் வாழ்கிறென் என உறுதியாகக் கூறினார்.

அதனால் சாக்ரடீஸுக்குத் தண்டனை உறுதியாயிற்று.முதலில் அவரை நாடு கடத்துவது என முடிவாகியது.பின்பு பெருந்தொகையை அபராதமாகச் செலுத்தினால் அவரை விடுதலை செய்துவிடுவதாகவும் கூறினர்.ஆனால் இவ்விரு தண்டனைகளையும் சாக்ரடீஸ் ஏற்க மறுத்து விட்டார்.

அதனால் ஆத்திரமுற்ற அரசு, சாக்ரடீஸின் போக்கு அரசாங்கத்தை அவமதிப்பதாக உள்ளது என்று கூறி அவறுக்கு மரண தண்டனை அளித்தது.
சாக்ரடீஸ் கொடிய விஷத்தை உண்டு இறக்க வேண்டும் என முடிவாகியது.ஷெமலாக் என்னும் கொடிய விஷம் கொடுக்கப்பட்டது.அது கேட்டு அவர் மனைவி அழுது புலம்பினார். அரசாங்கம் சுமர்த்திய குற்றங்களை ஏற்றுக்கொண்டு விடுதலை ஆகுமாறு மன்றாடினாள். சாக்ரடீஸின் நண்பர்களும் வஞ்சகர்களின் பிடியிலிருந்து சாக்ரடீஸை விடுவிக்க மறைமுகமாக முயற்சி செய்தனர்.ஆனால் சாக்ரடீஸ்,இறுதி வரை அவற்றை ஏற்க மறுத்துவிட்டார்.பின்பு விஷம் அருந்தி மரணம் அடைந்தார்

அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எதையும் சிந்திகாமல் அப்படியே ஏற்காதே, ஏன்,எதற்காக,எப்படி என்னும் வினாக்களை எழுப்பி உண்மையை உணர்ந்துக்கொள். உன்னையே நீ எண்ணிப்பார்.எனச்சிந்தனைக்கு வழிவகுத்த அறிஞன் சாக்ரடீஸூக்கு ஏதென்ஸ் அளித்த பரிசு...............
ஒருகோப்பை நஞ்சு!

1 comment: